அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோதமாக புகலிடம் கோரி செல்ல முயன்ற 36 பேர் கைது

சட்டவிரோதமாக புகலிடம் கோரி செல்வதற்கு தயாராக இருந்ததாகக் கூறப்படும் 36 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்களில் ஆதரவாளர்கள் இருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 இராகம, குருகுலவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விடுதியொன்றில் தங்கியிருந்தபோதே நேற்று வியாழக்கிழமை இரவு இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

 2 ஆதரவாளர்கள் உட்பட 21 ஆண்களையும் 3 பெண்களையும் 10 சிறுவர்களையும் கைதுசெய்துள்ளதாகவும் இவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் கூறினர்.

 இந்த சந்தேக நபர்களை மஹர நீதவான் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


சட்டவிரோதமாக புகலிடம் கோரி செல்ல முயன்ற 36 பேர் கைது Reviewed by Admin on August 09, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.