அண்மைய செய்திகள்

recent
-

மாணிக்க கற்களை கடத்திய சீன பெண் விமான நிலையத்தில் கைது

மாணிக்க கற்களை கடத்தி சென்ற சீனா பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் இன்று காலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த பெண் 4.2 மில்லியன் ரூபா பெறுமதியான மாணிக்க கற்களை கடத்தி வந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சீனாவின் ஷங்காய் விமான நிலையத்தில் இருந்து கட்டுநாயக்க சென்ற 35 வயதான இந்த சீன பெண் தனது பயண பொதியில் மறைத்து வைத்து இதனை எடுத்துச் சென்றுள்ளார். சீனா பெண்ணிடம் சுங்க அதிகாரிகள் விசாரணை நடத்திய போது, தனது பயண பொதியில் இந்த மாணிக்க கற்கள் எப்படி வைக்கப்பட்டது என்பது தனக்கு தெரியாது என்று கூறியுள்ளார்.

 எனினும் இந்த பெண் சீனாவில் இருந்த இலங்கைக்கு நான்கு முறை வந்து சென்றிருப்பது அவரது கடவுச்சீட்டை பரிசோதித்ததில் தெரியவந்தாக அதிகாரிகள் கூறினர். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் தொடர்ந்தும் விசாரைணை நடத்தப்பட்டு வருகிறது.


மாணிக்க கற்களை கடத்திய சீன பெண் விமான நிலையத்தில் கைது Reviewed by Admin on August 16, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.