அண்மைய செய்திகள்

recent
-

செல்வராசா செல்வக்குமரன( டிலான்) வெளியிட்ட அறிக்கைக்கு மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை பதில்

நடுநிலமை, பாரபட்சமின்மை என மார் தட்டும் சமூக நல சங்கங்கள் இரட்டை வேடம் இடுவது ஏன்? செல்வராசா செல்வக்குமரன( டிலான்) வெளியிட்ட அறிக்கைக்கு மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர்  எஸ்.சுனேஸ் சோசை பதில்.



எந்தவிதமான அரசியல் பின் புலமும் தெளிவுமற்ற சுயநலவாதியான சித்தறிவுக் கொண்ட சிறுவன் செல்வராசா செல்வக்குமரன் (டிலான்) தம்பிக்குஒருதகவல்...................

நீர் 2011ம் ஆண்டு உள்ளுராட்சி தேர்தலில் களம் இறக்கப்படுவதற்கு எவ்வாறு தயார் படுத்தப்பட்டீர் .

உம்மிடம் உள்ள பண பலத்தை துணையாகக் கொண்டு ஏனைய அப்பாவி மீனவர்களுக்கு மறுக்கப்பட்ட தடை செய்யப்பட்ட மீன் பிடி உபகரணங்களை பயன்படுத்தி தொழில் செய்யவும்  உமது கடல் உற்பத்திகளை தங்கு தடையின்றி ஏற்றி இறக்க படைத்தரப்பின் உதவியையும் பெற்றுஅவை மூலம் உமது பண பலத்தையும் வசதி வாய்ப்பினையும் அதிகரித்துக் கொண்டிர்.

இதன் ழூலம் ஏழை மீனவர்களை உமது பண பலத்தால் விலைக்கு வாங்கி தேர்தலில் வெற்றியும் அடைந்தீர்.

 இந்த செஞ்சோற்றுக் கடனை தீர்க்க உமது குடும்பத்தின் பாரம்பரிய தமிழ் அரசியல் ஈடுபாட்டை புறம் தள்ளி வெற்றிலையுடன் இணைந்தீர். 
ஆயினும் அந்த அமைச்சரின் தொடர்ச்சியான அடாவடிகளையும் அநீதிகளையும் கண்டு மனம் உடைந்தீர்.

அயினும் புதிதாக அனுபவிக்கும் அரசியல் செல்வாக்கினை இழக்க மனமின்றி நாமல் ராஜபக்சவின் துனையினை நாடினீர்.

 இது தான் உமது சுயநல அரசியல் என்பதனை நாமும் மக்களும் அறீவார்கள்.

இந்த விதமான கொள்ளை அற்ற சுயநல அரசியலில் அரச தரப்பின் அடிவருடியாக செயற்படும் உமக்கு எதுவித சுய நோக்கம் அற்று உறுதியான கொள்கையுடன் எம் இனத்தின் உரிமைக்காகவும் எதிர்கால நலனுக்காகவும் அரசின் அடாவடித்தனங்களுக்கு எதிராக குரல் எழுப்பும் எம் போன்ற மீனவ ஒத்துழைப்பு பேரவையும் மன்னார் பிரஜைகள் குழுவையும் விமர்சிக்க உமக்கு என்ன யோக்கியதை இருக்கின்றது?

எமது அமைப்புக்கள் உமது ஜக்கியமக்கள் சுதந்திர முன்னனி அரசின் தமிழ் இன ஒழிப்பு குரல் நசுக்கப்பட்ட தமிழ் மக்களின் மனித உரிமைக்காக குரல் கொடுப்பதை தவிர எந்த அரசியல்வாதிக்கு பின்னாலும் நாம் செல்லவும் இல்லை அப்படி செல்ல வேண்டிய அவசியமும் இல்லை.

தமிழர் உரிமைகளுக்காக எம்மால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் எமது கொள்கைகளை பின்பற்றும் தமிழ் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அமைந்தால் அதற்கு நாம் பொறுப்பல்ல. 

தமிழ் மக்களின் பொதுப் பிரச்சினைகளை சர்வதேசத்திற்கு தெளிவுப்படுத்தும் நோக்குடன் செயற்படும் அமைப்பக்கள் அவை அரச,அரச சார்பற்ற நிறுவனங்களாகவோ? அல்லது அரசியல் கட்சிகளாகவும் இருக்கலாம். 

அவை எமது கொள்கைகளையும் செயற்பாடுகளையும் சார்ந்தவையாக இருக்குமானால் அல்லது பிரதிபலிக்குமானால் அவற்றிற்கு நாம் பொறுப்பு ஏற்க முடியாது. 

நாம் அவைகளுடன் இனைந்தோ அல்லது அவை எம்முடன் இனைந்தோ அல்லது தனி தனியாகவோ செயற்படும் போது உமதுபக்கச்சார்பு கொண்ட சுயநல அரசியலுக்கு பாதகம் எனநீர் புலம்பிகதறுவதை இட்டுநாம் கவலைப்படபோவதில்லை.

எமது கொள்கைகளுக்காக தமிழினம்  தலை நிமிர்ந்து வாழுவதற்காக எமது உறுதியான கொள்கைகளை தொடர்ந்தும் முன்னெடுப்;;போம் செயற்படுவோம் உம்மை போன்று சுயநலவாதிகள் கூனிக்குறுகி கூக்குரல் இடுவதை இட்டு நாம் கவலைப்படப் போவதில்லை.

இவ்வாறு 31-08-2013 அன்று மன்னார் இணையத்தில்(NewMannar.com) செல்வராசா செல்வக்குமரன்  (டிலான)  வெளியீட்ட தகவல்களை மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையும் மன்னார் மாவட்டபிரஜைகள் குழுவும் வன்மையாக கண்டிப்பதோடு இவ்வாறான செய்திகளை வெளியிடுகின்ற போது உண்மையான தகவல்களை மாத்திரம் வெளியீடும் படியும் மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளரும் முசலி பிரதே சபிரஜைகள் குழுவின் அமைப்பாளருமான சுனேஸ் கேட்டுக்கொள்ளுகின்றார்.


மன்னார் நிருபர்
31-08-2013

தொடர்புபட்ட செய்தி 
செல்வராசா செல்வக்குமரன( டிலான்) வெளியிட்ட அறிக்கைக்கு மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு பேரவையின் இணைப்பாளர் எஸ்.சுனேஸ் சோசை பதில் Reviewed by NEWMANNAR on August 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.