அண்மைய செய்திகள்

recent
-

அமைச்சர்களான சரத்குமார குனரட்ன, சுசில் பிரேம ஜெயந்த மன்னார் விஜயம்-படங்கள்

கடல் தொழில் பிரதியமைச்சர் சரத்குமார குனரட்ன மற்றும் சுற்றுச் சூழல்,அரச வழங்கல் அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த ஆகியோர் இன்று சனிக்கிழமை காலை மன்னாருக்கு வருகை தந்தனர். இன்று காலை 10 மணியளவில் மன்னார் உப்புக்குளத்தில் உள்ள சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் மக்கள் சந்திப்பு ஒன்று இடம் பெற்றது.

 இதன் போது சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்தவர்களுக்கான அங்கத்துவ அட்டையும் வழங்கி வைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து அங்கு மக்கள் சந்திப்பு இடம் பெற்றது.இதன் போது மீள் குடியேறிய மக்கள் தமது பிரச்சினைகளை முன்வைத்தனர்.

 குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள்,இந்திய வீட்டுத்திட்டத்தில் இடம் பெற்றுள்ள அநீதிகள் உற்பட பல பிரச்சினைகளை மக்கள் முன்வைத்தனர்.

குறித்த சந்திப்பில் சிறிலங்கா சுதந்திர மாவட்ட பிரதான அமைப்பாளர் பி.சூசைதாசன் குளாஸ்,செயலாளர் என்.சேமாலை பீரின் மற்றும் சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்களான செல்வக்குமரன் டிலான்,ஏ.றொபேட் பீரிஸ்,செபமாலை திஸவீரசிங்கம்(லிங்கேஸ்) ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.









அமைச்சர்களான சரத்குமார குனரட்ன, சுசில் பிரேம ஜெயந்த மன்னார் விஜயம்-படங்கள் Reviewed by Admin on August 31, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.