அண்மைய செய்திகள்

recent
-

வடமாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்!- பிள்ளையான்

வடக்கு மாகாண சபைக்குப் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார் வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றமை குறித்து கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்




 இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, 

 எந்த அரசியல் கட்சி வடக்கு மாகாண சபையைக் கைப்பற்றிக் கொண்டிருந்தாலும், அது பிரச்சினை அல்ல. ஆனால் அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் கீழ் அந்த மாகாண சபைக்குரிய காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்த்ததைவிட பெரும் வெற்றியொன்றை மக்கள் அவர்களுக்கு வழங்கியுள்ளனர்.

 எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாகாண சபையொன்றுக்கு வழங்க முடியாத அதிகாரங்கள் குறித்த யோசனைகள் கூட உள்ளடங்கியுள்ளன. மாகாண சபையின் மூலமாக நிறைவேற்ற இயலாத விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதம் நிறைவேற்றப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து பார்க்கவுள்ளோம்.

 வடக்கின் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வரவேற்றாலும், கிழக்கு மாகாண சபை வெவ்வேறு இனங்களைக் கொண்டிருப்பதால் இங்கு பொதுத்தேர்தல் ஒன்றின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வெற்றி என்பது சிரமத்துக்குரியது என்றார்.
வடமாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்!- பிள்ளையான் Reviewed by Admin on September 28, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.