அண்மைய செய்திகள்

recent
-

திலீபனின் நினைவு நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு

தமிழீழத் தாயக விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்து அகிம்சை வழியில் போராடி உயிர் நீத்த தியாக தீபம் திலீபனின் (இராசையா பார்த்தீபன்) 26 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்றைய தினம் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிகழ்வானது முற்பகல் 10.48 மணிக்கு திலீபன் சாவைத் தழுவிக் கொண்ட நேரத்தில் ஒன்று கூடிய மாணவர்கள் திலீபனின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி விளக்கேற்றி அஞ்சலி செலுத்தியதுடன் நினைவு பேருரைகளையும் நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன் பல்கலைக்கழகத்தின் உட்பகுதி எங்கும் திலீபனின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு காணப்படுகிறது.

திலீபனின் நினைவு நாள் யாழ் பல்கலைக்கழகத்தில் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிப்பு Reviewed by NEWMANNAR on September 26, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.