மன்னார் மடுவிற்கு சுகாதார அதிகாரி தேவை-மக்கள் எதிர்பார்ப்பு
மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி இடமாற்றம் பெற்று சென்று உள்ளதால் அப் பிரதேச மக்கள் பெரிதும் பாதிக்கபட்டு உள்ளனர்.
குறிப்பாக கர்ப்பிணி தாய்மார்களுக்கான மாதாந்த கிளினிக் அனைத்தும் தடைப்பட்டு உள்ளது.
இதனால் இப் பிரதேச மக்கள் சுமார் 50 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து மன்னார் பொது வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியுள்ளது.இதனால். இக் கஷ்டபட்ட பிரதேச மக்கள் பெரும் பண செலவு செய்ய வேண்டியுள்ளதுடன் கர்ப்பகாலத்தில் அலைச்சலுக்கும் உள்ளாகி வருகின்றனர்
எனினும் மடு சுகாதார வைத்திய அதிகாரியாக புதிதாக இடமாற்றம் பெற்றுள்ள வைத்தியர் மன்னார் பொது வைத்தியசாலையில் இருந்து இப் பிரதேசத்துக்கு செல்ல மறுத்து வருகின்றார்
வட மாகாண சுகாதார அமைச்சர் வைத்தியர் சத்தியலிங்கம் அவர்கள் இதற்குரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும்என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மன்னார் மடுவிற்கு சுகாதார அதிகாரி தேவை-மக்கள் எதிர்பார்ப்பு
Reviewed by Admin
on
October 12, 2013
Rating:
.jpg)
No comments:
Post a Comment