அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் நீதிமன்றத்தினுள் கையடக்கத்தொலைபேசி ஒலித்தமையினால் அபராதம்

மன்னார் நீதிமன்றத்தில் மன்ற செயற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டிருந்த போது
கையடக்கத்தொலைபேசியின் ஒலி ஒலித்த போது பொலிஸாரால் நீதிமன்ற வழக்கு விசாரனைக்காக வந்த ஒருவர் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது .

இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் இடம் பெற்றுள்ளது .

மன்னார் நீதிமன்றத்தின் செயற்பாடுகள் இடம் பெற்றுக்கொண்டுடிருந்த போது நீதிமன்றத்தினுள் வழக்கு விசாரனைக்காக அமர்ந்திருந்த ஒருவருடைய கையடக்கத்தொலைபேசி மன்றினுள் ஒலி எழுப்பியுள்ளது .

உனடியாக அவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு அவருக்கு எதிராக மன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டது .

இதன் போது இக்குற்றத்தை குறித்த நபர் ஒப்புக்கொண்டமையினால் குறித்த நபருக்கு நீதிபதி ஆனந்தி கணகரட்னம் எச்சரிக்கை விடுகையில்

நீதிமன்றத்திற்குள் வரும் போது கையடக்கத்தொலைபேசிகள் துண்டிக்கப்பட்ட நிலையிலேயே இருக்க வேண்டும் என அறிவித்தல்கள் வழங்கப்பட்டிருந்த போதும் அறிவுருத்தலை கவனம் செலுத்தாமையினை கண்டித்ததுடன் குறித்த நபருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த உத்தரவிட்டார் .

கைப்பற்றப்பட்ட கையடக்கத்தொலைபேசியும் மீள ஒப்படைக்கப்பட்டது .
மன்னார் நீதிமன்றத்தினுள் கையடக்கத்தொலைபேசி ஒலித்தமையினால் அபராதம் Reviewed by NEWMANNAR on October 24, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.