அண்மைய செய்திகள்

recent
-

நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது- வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன்.

யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர்களின் பதவியேற்பு நிகழவில் தமிழீழ விடுதலை இயக்கம் டெலோ சார்பாக மன்னார் மாவட்டத்தில் போட்டியிட்டு தெரிவான மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் அவர்கள் நேற்று குறித்த பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்காண காரணம் அவருடைய மனைவி விபத்தில் சிக்கியதே என வெளியான செய்தியில் எவ்வித உண்மைகளும் இல்லை என மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் தெரிவித்தார்.

-இது தொடர்;பாக அவர் ஊடகங்களுக்கு கருத்துத்தெரிவிக்கையில்,,,,

-வடமாகாண சபை உறுப்பினராகிய நான் நேற்றைய தினம் இடம்; பெற்ற பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்காண காரணம் எனது மனைவிக்கு எதிர் பாராத விதமாக ஏற்பட்ட விபத்தே காரணம் என செய்திகள் வெளியாகியுள்ளது.அச் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை.

எனது மனைவி அவ்வாரான விபத்தில் மாட்டிக்கொள்ளவும் இல்லை.

-நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது.அதனை வெகு விரையில் வெளியிடுவேன்.என அவர் தெரிவித்தார்.


-மன்னார் நிருபர்-


(12-10-2013)

நான் பதவியேற்பு நிகழ்வில் கலந்து கொள்ளாமைக்கு அரசியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளது- வட மாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன். Reviewed by NEWMANNAR on October 12, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.