அண்மைய செய்திகள்

recent
-

அதி­க­மான பய­ணி­களை ஏற்றிச்செல்லும் பேருந்­து­களை கண்­கா­ணிக்­க­ வேண்டும் பொலி­ஸா­ரிடம் மக்கள் கோரிக்கை

அதிகளவான பயணிகளை ஏற்றி நெருக்கடிகளை ஏற்படுத்துகின்ற தனியார் பஸ்களை போக்குவரத்து பொலிஸார் கண்காணிக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர் . போக்குவரத்து விதிமுறைகளைக் கட்டுப்படுத்தி விபத்துக்களைத் தடுப்பதற்கான நடைமுறைகள் தொடர்பான கலந்துரையாடல் காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவு போக்குவரத்து கண்காணிப்பு பொலிஸ் அலகினால் புத்தூரில் நடத்தப்பட்டது .

 வலி . கிழக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் பாடசாலை அதிபர்கள் , மாணவர் பிரதிநிதிகள் , பொதுநிறுவனங்களின் நிர்வாகிகள் தனியார் மினிபஸ் மற்றும் முச்சக்கரவண்டி சாரதிகள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துக்களை பரிமாறினர் . இக் கலந்துரையாடலில் , அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றி பயணிகளுக்கு அசெளகரியங்களை ஏற்படுத்துகின்ற தனியார் பஸ்களை கண்காணிக்க வேண்டும் . இந்த விடயத்தில் பொலிஸார் தகுந்த ஏற்பாடுகளை செய்து பயணிகளுக்கு வசதி செய்யவேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டு வலி - யுறுத் - தப்பட்டது . 

 பொது மக்களின் கோரிக்கை நியாய - மானது என்பதை ஏற்றுக்கொண்ட காங் - கேசன்துறைப் பிரிவு பொலிஸ் அத்தியட்சகர் , தனியார் மினிபஸ் இரு தரப்பின் நியாயங்களைக் கேட்டறிந்தார் . தரப்பினரின் கருத்துக்களையும் ஆராய்ந்த பின்னர் பொதுமக்களுக்கு வசதிசெய்வதாகவும் தனியார் மினிபஸ்களில் அளவுக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவது தொடர்பாக விரிவாக ஆராய்ந்த பின்னர் பொதுவான விதிமுறைகள் தொடர்பாக அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்தார் . 

 வாகனப் போக்குவரத்து நடைமுறை மற்றும் வீதி விபத்துக்கள் தொடர்பான திரைப்படமும் காண்பிக்கப்பட்டது . பாடசாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை ஒழுங்கமைக்கும் மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன .
அதி­க­மான பய­ணி­களை ஏற்றிச்செல்லும் பேருந்­து­களை கண்­கா­ணிக்­க­ வேண்டும் பொலி­ஸா­ரிடம் மக்கள் கோரிக்கை Reviewed by NEWMANNAR on November 21, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.