அண்மைய செய்திகள்

recent
-

இலங்கையர் இராமேஸ்வரத்தில் கைது

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாக தங்கியிருந்தமை, அமெரிக்க நாணயத்தாள்களை வைத்திருந்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களின் பேரில் இவரை கைதுசெய்துள்ளதாக அந்த நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 வழமையான ரோந்துப் பணியில் ஈடுபட்ட பொலிஸார், சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டபோதே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் பயணத்திற்கு தேவையான எந்தவித ஆவணங்களும் இன்றிய நிலையில், 800 அமெரிக்க டொலர்களை வைத்திருந்துள்ளார்.

 2000ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்த தான் பெங்களூர் மற்றும் சென்னையில் தங்கியிருந்துவந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் சந்தேக நபர் தெரிவித்துள்ளார். 

 மேலும், தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை இவர் திருமணம் செய்துள்ளதாகவும் விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது. இவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.
இலங்கையர் இராமேஸ்வரத்தில் கைது Reviewed by Admin on December 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.