அடிப்படை வசதிகள் கிடைக்காமையால் நாயாறு கிராமத்தில் மக்கள் அசௌகரியம்.
முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்குட்பட்ட நாயாறு கிராமத்தில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ள
மக்கள் குடியிருப்பு வீடுகள் , குடிநீர் , போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கிடைக்காத நிலையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர் .
யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட பின்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு நாயாறு கிராமத்தில் சுமார் 81 குடும்பங்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளன .
இந்நிலையில் இம்மக்களுக்கு இன்னமும் நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவில்லை . இதேவேளை , இக் குடும்பங்களில் 14 குடும்பங்களுக்கு இன்னமும் தற்காலிக வீடுகள் கூட அமைத்துக்கொடுக்கப்படவில்லை . இப்பகுதியில் யுத்தத்தால் சேதமடைந்த நிலையில் காணப்பட்ட வீடுகள் மட்டும் யு 27 வீடுகளில் 21 . என் . ஹபிற்ரட் நிறுவனத்தினால் பகுதியளவில் ஏனையவர்கள் வீடுகள் இன்றி பாதிப்படைந்துள்ளனர் .
இதேவேளை , இப்பகுதியில் வசிக்கின்ற மக்களுக்கு மின்சாரம் , குடிநீர் , கிணறுகள் , மலசலகூடங்கள் போன்ற அடிப்படை வசதிகளும் இன்னமும் பூர்த்திசெய்யப்படவில்லை .
இங்கு வீதிகளும் இன்னமும் குண்டும் குழியுமாகவே காணப்படுகின்றன . இம் மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கும் இன்னமும் உதவிகள் எவையும் வழங்கப்படவில்லை .
சமுர்த்தி வங்கி , ஆரம்பசுகாதார நிலையம் போன்ற வசதிகள் இன்மையாலும் இம்மக்கள் தமது அன்றாட கடமைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் .
எனவே , தமது நிலையினை அதிகாரிகள் கருத்திலெடுக்கவேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .
அடிப்படை வசதிகள் கிடைக்காமையால் நாயாறு கிராமத்தில் மக்கள் அசௌகரியம்.
Reviewed by Admin
on
December 23, 2013
Rating:
No comments:
Post a Comment