எமது ஒற்றுமையை எடுத்தியம்ப வேண்டிய பொறுப்பு மிக்க தருணத்தில் நாம் இருக்கின்றோம் : ஞானபிரகாசம் மன்னார் நகர சபை முதல்வர்
மாறிவருகின்ற அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு எமது ஒற்றுமையை எமது மக்களுக்கும் ,நாட்டிற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்தியம்ப வேண்டிய பொறுப்பு மிக்க தருணத்தில் நாம் இருக்கின்றோம்
தமிழினம் ஒரு இக்கட்டான சூழலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில பிரதேச சபை மற்றும் நகரசபைகளின் உறுப்பினர்களின் செயல்கள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்த நிலை மாறவேண்டும். சகல உறுப்பினர்களும் தங்களது குறுகிய சுயநலன்கள் அல்லது குழுநலன் சார்ந்து செயற்படுவது தவிர்க்கப்படவேண்டும என மன்னார் நகர சபை முதல்வர் ஞானபிரகாசம் அவர்களின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவது
உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் சபைகளின் தவிசாளருக்கும் இடையில் தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகளைக் கூட்டமைப்பின் மேல்மட்டத் தலைமைக்குத் தெரிவித்து தீர்வுகாண்பதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர, வரவு-செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் தவிசாளர்களைப் பதவிவிலகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவர் எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலிகாமம் கிழக்கு, மாணிப்பாய், வடமராட்சி, கிழக்கில் நாவிதன்வெளி உள்ளிட்ட சில உள்ளாட்சி அமைப்புகளின் வரவு-செலவுத்திட்டம் முறையான காரணங்கள் எதுவுமின்றி வெறுமனே தனிமனித வெறுப்பின் காரணமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளதைச் சமூகசிந்தனையுடைய எவராலும் ஏற்க முடியாததாகும்.
ஏற்கனவே அரசாங்கம் சபைகளை இயங்கவிடாமல் தடுக்கின்றது. இந்நிலையில் எமது அங்கத்தவர்களே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோவது எமது இலட்சியத்தையே சிறுமைப்படுத்துவதாக அமைந்துவிடும்.
மாறிவருகின்ற அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு எமது ஒற்றுமையை எமது மக்களுக்கும் எமது நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்தியம்ப வேண்டிய பொறுப்பு மிக்க தருணத்தில் நாம் இருக்கின்றோம் என்பதைச் சகல உறுப்பினர்களும் உணர்ந்து செயற்படவேண்டிய தருணம் இது. வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்த உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதால் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது.
மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்கள்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாழாக்காமல் காப்பாற்றுவதன் மூலமே எமது இலக்கை அடைவதற்கான வழிகள் பிரகாசமடையும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் தலைமைக்கு அத்தகைய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதே சாலச்சிறந்தது.
உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் தங்களது மனக்குறைகளையும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள நியாயமான குறைபாடுகளையும் தங்களுக்குள்ளும் முடியாதவிடத்து தலைமையுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு விட்டுக்கொடுப்புகளுடன் சபைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று இருக்கின்ற சொற்ப அதிகாரங்களுடன் மக்களுக்கு எம்மால் முடிந்தவரை நேர்மையுடனும் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவதற்கு முன்வரவேண்டும்.
எமக்குள் முரண்பட்டு முரண்பாடுகளைப் பகிரங்கப்படுத்துவதென்பது எம்தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வதற்குச் சமம். நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லதாக நடக்கட்டும்.
ஒன்றுபடுவோம். விடியலை நோக்கி முன்னேறுவோம். இலக்கை அடைவோம் என குறித்த ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.
தமிழினம் ஒரு இக்கட்டான சூழலில் பயணித்துக்கொண்டிருக்கும் நிலையில் சில பிரதேச சபை மற்றும் நகரசபைகளின் உறுப்பினர்களின் செயல்கள் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது.
இந்த நிலை மாறவேண்டும். சகல உறுப்பினர்களும் தங்களது குறுகிய சுயநலன்கள் அல்லது குழுநலன் சார்ந்து செயற்படுவது தவிர்க்கப்படவேண்டும என மன்னார் நகர சபை முதல்வர் ஞானபிரகாசம் அவர்களின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்படுவது
உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் தங்களுக்கும் சபைகளின் தவிசாளருக்கும் இடையில் தோன்றியுள்ள கருத்து முரண்பாடுகளைக் கூட்டமைப்பின் மேல்மட்டத் தலைமைக்குத் தெரிவித்து தீர்வுகாண்பதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர, வரவு-செலவுத்திட்டத்தைத் தோற்கடிப்பதன் மூலம் தவிசாளர்களைப் பதவிவிலகச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை மக்கள் நலன்சார்ந்து சிந்திப்பவர் எவரும் ஏற்க மாட்டார்கள் என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.
வடக்கு-கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையிலான வலிகாமம் கிழக்கு, மாணிப்பாய், வடமராட்சி, கிழக்கில் நாவிதன்வெளி உள்ளிட்ட சில உள்ளாட்சி அமைப்புகளின் வரவு-செலவுத்திட்டம் முறையான காரணங்கள் எதுவுமின்றி வெறுமனே தனிமனித வெறுப்பின் காரணமாகத் தோற்கடிக்கப்பட்டுள்ளதைச் சமூகசிந்தனையுடைய எவராலும் ஏற்க முடியாததாகும்.
ஏற்கனவே அரசாங்கம் சபைகளை இயங்கவிடாமல் தடுக்கின்றது. இந்நிலையில் எமது அங்கத்தவர்களே அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்குத் துணைபோவது எமது இலட்சியத்தையே சிறுமைப்படுத்துவதாக அமைந்துவிடும்.
மாறிவருகின்ற அரசியல் சூழலைக் கருத்திற்கொண்டு எமது ஒற்றுமையை எமது மக்களுக்கும் எமது நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்தியம்ப வேண்டிய பொறுப்பு மிக்க தருணத்தில் நாம் இருக்கின்றோம் என்பதைச் சகல உறுப்பினர்களும் உணர்ந்து செயற்படவேண்டிய தருணம் இது. வரவு-செலவுத் திட்டத்தை எதிர்த்த உறுப்பினர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதால் மட்டும் பிரச்சினைக்குத் தீர்வு ஏற்பட்டுவிடாது.
மாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் தங்கள்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாழாக்காமல் காப்பாற்றுவதன் மூலமே எமது இலக்கை அடைவதற்கான வழிகள் பிரகாசமடையும். ஆகவே உறுப்பினர்கள் அனைவரும் தலைமைக்கு அத்தகைய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தாமல் தவிர்ப்பதே சாலச்சிறந்தது.
உள்ளாட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் தங்களது மனக்குறைகளையும் வரவு-செலவுத் திட்டத்தில் உள்ள நியாயமான குறைபாடுகளையும் தங்களுக்குள்ளும் முடியாதவிடத்து தலைமையுடனும் கலந்துரையாடல்களை மேற்கொண்டு விட்டுக்கொடுப்புகளுடன் சபைகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்று இருக்கின்ற சொற்ப அதிகாரங்களுடன் மக்களுக்கு எம்மால் முடிந்தவரை நேர்மையுடனும் திறமையுடனும் அர்ப்பணிப்புடனும் பணியாற்றுவதற்கு முன்வரவேண்டும்.
எமக்குள் முரண்பட்டு முரண்பாடுகளைப் பகிரங்கப்படுத்துவதென்பது எம்தலையில் நாமே மண்ணை அள்ளிப்போட்டுக்கொள்வதற்குச் சமம். நடந்தவைகள் நடந்தவையாக இருக்கட்டும். நடப்பவை நல்லதாக நடக்கட்டும்.
ஒன்றுபடுவோம். விடியலை நோக்கி முன்னேறுவோம். இலக்கை அடைவோம் என குறித்த ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.
எமது ஒற்றுமையை எடுத்தியம்ப வேண்டிய பொறுப்பு மிக்க தருணத்தில் நாம் இருக்கின்றோம் : ஞானபிரகாசம் மன்னார் நகர சபை முதல்வர்
Reviewed by Author
on
December 22, 2013
Rating:

No comments:
Post a Comment