அண்மைய செய்திகள்

recent
-

மதவாச்சி - தலைமன்னார் புகையிரத வீதி நிர்மாண பணிக்கு கொண்டு வரப்பட்ட தண்டவாளங்கள் திருட்டு

மதவாச்சிக்கும் தலைமன்னாருக்கும் இடையே நிர்மாணிக்கப்பட்டு வரும் ரயில் வீதி
 நிர்மாணப்பணிகளுக்கெனகொண்டுவரப்பட்டிருந்த இரும்புத் தண்டவாளங்கள் சில திருடப்பட்டுள்ளன .

சுமார் 150 மீற்றர் நீளமான ரயில் தண்டவாளங்கள் பல இவ்வாறு திருடப்பட்டுள்ளதாகவும் இந்த திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் சிலர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது .

மதவாச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட யகாவல பிரதேசத்தில் அமைந்துள்ள ரயில் வீதி அமைக்கும் பணியினை முன்னெடுக் கும் இந்திய நிறுவனத்திலிருந்தே இவை திருடப்பட்டுள்ளன .

தமது நிறுவனத்திலிருந்து ரயில் தண்டவாளங்கள் திருடப்பட்டுள்ளமை குறித்து நிறுவனம் மதவாச்சி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது . இந்நிலையில் திருட்டுடன் சம்பந்தப்பட்டி ருந்த இந்நால்வரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து தண்ட வாளங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் . கைது செய் யப்பட்டவர்கள் குறித்த இந்திய நிறுவனத் தின் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த தனியார் பாதுகாப்பு ஊழியர்கள் எனப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மதவாச்சி மற்றும் நேரியகுளம் பகுதியை சேர்ந்தவர்களாவர் .

சந்தேக நபர்களிடமிருந்து கென்டேனர் ரக வாகனமொன்றும் 6 அடி நீளமான 8 ரயில் தண்டவாளங்களும் பொலிஸாரால் கைப் பற்றப்பட்டுள்ளன .

சுமார் 150 அடி நீளமான இந்த ரயில் தண் டவாளங்களை திருடிச்செல்வதற்கு ஏது வான முறையில் அவை சிறிய துண்டுகளாக வெட் டப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தே கிக்கின்றனர் . சம்பவம் தொடர்பில் விசார ணைகளை மேற்கொண்டுவரும் பொலிஸார் மற்றொரு சந்தேக நபரையும் கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர் .

இவ்வாறு திருடப்பட்டுள்ள ரயில் தண் டவாளங்கள் சுமார் 5 இலட்சம் ரூபா பெறு மதியானது எனத் தெரிவிக்கப்படுகிறது .
மதவாச்சி - தலைமன்னார் புகையிரத வீதி நிர்மாண பணிக்கு கொண்டு வரப்பட்ட தண்டவாளங்கள் திருட்டு Reviewed by Admin on January 12, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.