தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் மகஸின் சிறைச்சாலைக்கு சென்று அங்கு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
இம்மாதம் யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையின் கட்டடத்தில் இடம்பெற்ற சபை அமர்வில், வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் தமிழ் அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்ப வழங்க வேண்டுமென்ற பிரேரணையை கொண்டு வந்திருந்தார்.
அதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன், ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடிய போது காணாமல் போனோர் தொடர்பாகவும் அரசியல் கைதிகளாகவும் உள்ளோரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக தனது உரையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமிழ் அரசியல் கைதிகளை சந்தித்தார் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன்!
Reviewed by Admin
on
January 12, 2014
Rating:

No comments:
Post a Comment