இந்திய வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஆரம்பம்: மலையக மக்களுக்கு பயன்
.jpg)
இதில் மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டமும் அடங்கும் என இந்திய ஊடகம் ஒன்றிற்கு அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசாங்கத்தின் இரண்டாம் கட்ட வீட்டுத் திட்டம் வெற்றிகரமாக நிறைவுற்றதாக சிங்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இரண்டாம் கட்டத்தில் வட கிழக்கில் 10,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
யுத்தத்தால் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு இவ்வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்டப் பணியில் 16,000 வீடுகள் கட்டப்படவுள்ளதாகவும் அதில் தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் நேரடி பயன்பெறுவர் எனவும் வை.கே.சிங்ஹா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கத்துடன் ஆராய்ந்து தெளிவாக பயனாளிகள் தெரிவு செய்யப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்திய வீட்டுத்திட்டத்தின் மூன்றாம் கட்டம் ஆரம்பம்: மலையக மக்களுக்கு பயன்
Reviewed by Author
on
January 09, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment