அண்மைய செய்திகள்

recent
-

அருட்சகோதரி 'றெஜினா கூஞ்ஞ' அவர்கள் தனது 94ஆவது வயதில் இறைபதம் அடைந்தார் -படங்கள்

மன்னார் மாவட்டத்தில் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக இறை பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த மன்னார் தலைமன்னாரைச் சேர்ந்த அருட்சகோதரி றெஜினா கூஞ்ஞ அவர்கள் தனது 94 ஆவது வயதில் நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார்.

1919 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 04ஆம் திகதி (1919-10-04)பிறந்த அவர் 1943 ஆம் ஆண்டு யூலை மாதம் 30 ஆம் திகதி (1943-07-30) இறை அர்ப்பண வாழ்வில் இணைந்தார்.

இந்த நிலையில் சுமார் 70 வருடங்களுக்கு மேலாக இறை பணிக்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த அவர் உடல் நலக்குறைவின் காரணமாக நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை மன்னாரில் காலமானார்.

-இந்த நிலையில் அன்னாரது உடல் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் இன்று புதன் கிழமை காலை 10 மணி வரை மன்னார் கன்னியர் குரு மடத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

-இன்று புதன் கிழமை காலை 10 மணியளவில் பூதவுடல் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் தலைமையில் இரங்கல் திருப்பளி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

-இதன் போது அருட்தந்நநைதயர்கள்இஅருட்சகோதரிகள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.

-பின் மன்னார் பொது சேமக்காலைக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது











அருட்சகோதரி 'றெஜினா கூஞ்ஞ' அவர்கள் தனது 94ஆவது வயதில் இறைபதம் அடைந்தார் -படங்கள் Reviewed by Author on January 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.