புதிய வகை போதைப் பொருளுடன் நபரொருவர் கைது
இலங்கையில் எந்த பிரதேசத்திலும் இதுவரை கண்டுப்பிடிக்கப்படாத ஒரு வகை போதைப் பொருளுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப் பொருள் தூள் அடங்கிய 28 சிறிய பொதிகளுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டதை அடுத்து, தலா இரண்டு, 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடம் இருந்து கைப்பற்றிய போதைப் பொருளை அரச இரசாயன பகுப்பாய்வு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து அறிக்கை ஒன்றை பெறுமாறு நீதிமன்றம், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
நகரில் வாகனங்களை சோதனையிட்டு பொலிஸாருக்கு ஏற்பட்ட சந்தேகத்தை அடுத்து குறித்த நபர் சோதனையிடப்பட்டதுடன் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
புதிய வகை போதைப் பொருளுடன் நபரொருவர் கைது
Reviewed by NEWMANNAR
on
February 28, 2014
Rating:

No comments:
Post a Comment