மாகா சிவராத்திரி விழா திருக்கேதீஸ்வரத்தில்-படங்கள்
மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் நேற்று இரவு நடைபெற்றது சிவராத்திரி பூஜைக்கென நாட்டின்பல பாகங்களிலுமிருந்து பெரும் எண்ணிக்கையிலான இறை பக்த்தர்கள் திருக்கேதீஸ்வர சிவபெருமானின் அருளினை பெற திருக்கேதீஸ்வர ஆலயத்தில் கூடி இறைவழிபாடுகளில் கலந்து கொண்டனர்.
இம் முறை சிவராத்திரி வழிபாடுகளில் பங்கு பெற நாட்டின் பல பாகங்களிலுமிருந்து 5 இலட்சம் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டபோதீலும் சுமார் 2 இலட்சம் வரையிலான மக்களே கலந்து கொண்டனர்.தெரிவிக்கப்படுகிறது.
சிவராத்திரி பூசைகள் சிவாச்சாரியார் சிறி பலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
நள்ளிரவு 12:15கு மூன்றாம் யாமம் பூசையும் பின்னிரவு 2:00 மணிக்கு நான்காம் யாமக் கும்பபூசையும் நடைபெற்றது
விசேடமாக இந்தியாவிலிருந்து வருகைதந்த திருமுறைக்கென ஓதுவார் க.சற்குருநாதன் அவர்களின் நிகழ்வுகள் நடைபெற்றது
இதேவேளை வசந்த மண்டபத்தில் திருமுறை உட்பட மங்கள் இசை நிகழ்ச்சி ,சொற்பொழிவுகள் மற்றும் பல கலைநிகழ்வுகள் இடம்பெற்றன.
மாகா சிவராத்திரி விழா திருக்கேதீஸ்வரத்தில்-படங்கள்
Reviewed by Author
on
February 28, 2014
Rating:
Reviewed by Author
on
February 28, 2014
Rating:









No comments:
Post a Comment