அண்மைய செய்திகள்

recent
-

எமது மதத்தின் பாரம்­ப­ரி­யத்தை அழிக்க முனை­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நாம் சாத்­வீக ரீதியில் போரா­ட வேண்டும். சீ.யோகேஸ்­வரன்.

நாம் ஒன்­று­பட்டு இன உணர்­வோடு செயற்­பட வேண்டும். இத­னூ­டாக நாம் எமது மதத்­திற்­காக குரல் கொடுக்க வேண்டும். எமது மதத்தின் பாரம்­ப­ரி­யத்தை அழிக்க முனை­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நாம் சாத்­வீக ரீதியில் போரா­டு­ப­வர்­க­ளாக இருக்க வேண்டும் இல்­லா­விடில் நாம் ஏமாற்­றப்­பட்ட சமு­தா­ய­மாக மாறி­வி­டுவோம் என மட்­டக்­க­ளப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்­ட­மைப்பு பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சீ.யோகேஸ்­வரன் தெரிவித்தார்.

மட்­டக்­க­ளப்பு பால­மீன்­மடு, திராய்­மடு இந்து சமய அபி­வி­ருத்தி மன்­றத்தின் 18 ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பரி­ச­ளிப்பு விழாவும் பால­மீன்­மடு விக்­னேஸ்­வரா வித்­தி­யா­லய மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. அதன்­போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார்.

தலைவர் ந.ஜெக­தீசன் தலை­மையில் நேற்று நடை­பெற்ற நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக மட்­டக்­க­ளப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலை­வரும், பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான சீ.யோகேஸ்­வரன் கலந்து கொண்­ட­துடன், அதி­தி­க­ளாக கிழக்கு மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளான பிர­சன்னா இந்­தி­ர­குமார், இரா.துரை­ரெட்ணம், மட்­டக்­க­ளப்பு மாந­ர­சபை ஆணை­யாளர் மா.உத­ய­குமார் உட்­பட பலர் கலந்­து­கொண்­டனர்.

அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில்,

எமது இந்து மதம் உல­கத்­திலே நான்­கா­வது இடத்தில் இருக்­கின்­றது. இங்கு எங்­கெ­ளுக்­கென்று ஒரு நிலை­யான தலை­மைத்­துவம் இல்­லா­மையால் நாங்கள் இன்று சித­ற­டிக்­கப்­பட்ட நிலை­மையில் வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.

எங்­கா­வது ஒரு இந்து துன்­பப்­படும் போது நமக்கு அவ்­வு­ணர்வு மின் அலை போல தூண்­டப்­ப­ட­வேண்டும் என்று சுவாமி விவே­கா­னந்தர் கூறி­யி­ருக்­கின்றார். கடந்த காலத்­திலே இலங்கை மண்­ணிலே யுத்­தத்தால் கொல்­லப்­பட்­ட­வர்­களுள் பெரும்­பா­லா­ன­வர்கள் இந்­துக்கள். இதனால் எத்­தனை இந்­துக்­களின் மனங்கள் கொதித்­தெ­ழுந்­தன. யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் தமி­ழர்கள் என்­றுதான் நாம் குரல் கொடுக்­கின்றோம் ஆனாலும் அதிலும் அதிகம் பாதிக்­கப்­பட்­ட­வர்கள் இந்­துக்கள் என்று உரத்து குரல் கொடுப்­ப­தற்கு நாம் தவ­றி­விட்டோம்.

அத­னால்தான் இந்­தி­யாவின் தமிழ் நாட்டில் மாத்­தி­ரம்தான் இலங்கைத் தமி­ழர்­க­ளுக்கு இன்­னல்கள் இழைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. அதற்கு நீதி வேண்டும் என்று போரா­டிக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள். ஏனைய மாநி­லங்­களில் அவை உரைக்­கப்­ப­டு­வ­தில்லை. காரணம் தமிழர் என்ற கோதாவில் மாத்­திரம் நாம் செல்­வ­தனால்.

ஆனால் நியா­ய­மான முறையில் பெரும்­பா­லான இந்­துக்கள் இந்த துன்­பி­யலை அனு­ப­வித்­தனர் என்று கூறி­யி­ருந்தால் இன்று இந்­தியா முழு­வதும் எமக்­காக குரல் கொடுத்­தி­ருக்கும். அதனை நாங்கள் தவ­றி­விட்­டு­விட்டோம்.

எமது இந்து மதம் என்­பது பெருங்­கடல். இலங்கைத் தீவு ஒரு இந்துத் தீவு இதனை நாம் பல இடத்தில் குறிப்­பிட்­டி­ருக்­கின்றோம் ஆனால் இந்த தீவில் நாங்கள் இந்து சமயம் சம்­மந்­த­மான பாரம்­ப­ரி­யத்தை வர­லாற்றை பூர்­வீ­கத்தை இழக்­கின்ற ஒரு சமு­க­மாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கின்றோம்.

அந்­த­வ­கையில் இந்த மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் கூட இந்­துக்­க­ளா­கிய தமிழ்­மக்­களின் வாழி­டத்தைப் பறிக்­கின்ற பல முயற்­சிகள் இடம்­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன. அண்­மையில் வாகரைப் பிர­தேச செய­லாளர் பிரிவில் வெருகல் ஆற்றின் அருகில் ஒரு தீவுப்­ப­குதி எமது இனம் சாராத அர­சி­யல்­வா­தி­யினால் எமது மக்­க­ளிடம் இருந்து கொள்­வ­னவு செய்து எடுக்­கப்­ப­ட்­டி­ருக்­கின்­றது.

ஆனால் அந்த அர­சி­யல்­வாதி தற்­போது அவர் வாங்­கிய அந்த தீவிற்கு பாலம் போடு­வ­தற்­காக 1000 பாலங்கள் திட்­டத்தின் கீழ் உட்­ப­டுத்தி அறிக்கை செய்­தி­ருக்­கின்றார். அர­சாங்­கத்தால் கொண்­டு­வ­ரப்­படும் திட்­டங்கள் அர­சி­யல்­வா­தி­களின் இடங்­க­ளுக்காக பயன்­ப­டு­கின்­றது. இந்த நிலைமை தான் இங்கு இருக்­கின்­றது.

அந்த காணிகள் யாரால் விற்­கப்­ப­டு­கின்­றது என்றால் அது எமது மக்­களால் என்­பது மிகவும் மன­வ­ருத்­தத்­திற்­கு­ரி­யது. இந்த நிலை­மை­களில் மட்­டக்­க­ளப்பு மாவட்டம் பெரும் ஆபத்தை எதிர் நோக்கிக் கொண்­டி­ருக்­கின்­றது.

முன்பு நம் உரல் போல் ஒரு பக்­கத்தால் அடி­வாங்கிக் கொண்­டி­ருந்தோம் ஆனால் இன்று தவில் போல் இரு பக்­கமும் அடி­வாங்கிக் கொண்­டி­ருக்­கின்றோம். எனவே இந்த நிலையில் நாம் சிந்­திக்க வேண்­டி­ய­வர்­க­ளா­கவும் எமது காணி பூமி­களை பாது­காக்க வேண்­டி­ய­வர்­க­ளா­கவும் இருக்­கின்றோம். எங்­க­ளது காணிகள் பாது­காக்­கப்­பட்­டதால் தான் எமது இன மத அடை­யா­ளங்­களைத் தக்க வைக்க முடியும். சமயம் என்றால் அங்கு தமிழ் பற்றி கதைக்க கூடாது என்று ஒன்­றில்லை. சமயம் என்றால் தமிழ், தமிழ் என்றால் அது சமயம்.

நாம் எமது சமய பாரம்­ப­ரி­யங்­க­ளையும் பண்­பா­டு­க­ளையும் கட்­டிக்­காக்க வேண்­டி­ய­வர்­க­ளாக இரு­க்­கின்றோம். இந்த நாட்டில் கடந்த காலத்தில் நில­விய முரண்­பாடு மறைக்­கப்­பட்டு மத ரீதி­யாக இந்த செயற்­பா­டுகள் கொண்­டு­வ­ரப்­பட்­டி­ருப்­பதை எல்­லோரும் உணர்­வீர்கள்.

எமது மதத்தின் பாரம்­ப­ரி­யத்தை அழிக்க முனை­ப­வர்­க­ளுக்கு எதி­ராக நாம் சாத்­வீக ரீதியில் போரா­ட வேண்டும். சீ.யோகேஸ்­வரன். Reviewed by NEWMANNAR on March 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.