இந்திய மீனவர்கள் 15 பேர் கைது
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 15 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்கள் கடற்படையினரால் நேற்றிரவு தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
இவர்களின் 3 மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்தக் குழுவினர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்திய மீனவர்கள் 15 பேர் கைது
Reviewed by NEWMANNAR
on
March 06, 2014
Rating:

No comments:
Post a Comment