மலேசிய பயணிகள் விமானம் 239 பேருடன் மாயம்
மலேசிய தேசிய விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்றுடனான தொடர்புகள் அற்றுப் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெஜிங் நோக்கி பயணித்த இ்நத விமானத்தில் 239 பயணிகள் இருந்ததாக விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விமானத்தை தேடும் மற்றும் மீட்கும் அணியுடன் தற்போது இணைந்து பணியாற்றுவதாக மலேசிய விமான சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு சிறு பிள்ளைகள் அடங்கலாக 227 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இந்த விமானத்தில் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோலாலம்பூரிலிருந்து புறப்பட்டு 2 மணித்தியாலங்களில் இந்த விமானம் காணாமல் போயுள்ளது.
ஆசியாவில் மிகப்பாரிய விமான சேவை நிறுவனங்களில் ஒன்றான இதனை , நாளாந்தம் 37 ஆயிரம் பயணிகள் வரை பயன்பபடுத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
காணொளி பார்க்க
காணொளி பார்க்க
மலேசிய பயணிகள் விமானம் 239 பேருடன் மாயம்
Reviewed by Admin
on
March 08, 2014
Rating:

No comments:
Post a Comment