அண்மைய செய்திகள்

  
-

வன்னியில் நிலவும் ஆசி­ரி­யர்­ வெற்­றி­டங்­க­ளுக்­கு பதி­லீ­டாக யாழிலிருந்து ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம்.

வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்­பி­லி­ருந்து ஆசி­ரியர் பயிற்சி மற்றும் நிபந்­தனை அடிப்­ப­டையில் இட­மாற்றம்பெறும் ஆசி­ரி­யர்­களின் வெற்­றி­டங்­க­ளுக்­கு பதி­லீ­டாக யாழ்.மாவட்­டத்­தி­லி­ருந்து ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வுள்­ளனர். இதற்­கான ஏற்­பா­டு­களை வடக்கு மாகாண கல்வித் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது.

முல்­லைத்­தீவு, வவு­னியா, கிளி­நொச்சி, மன்னார் மாவட்­டங்­களை உள்­ள­டக்­கிய வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்பு பாட­சா­லை­க­ளி­லி­ருந்து 600 பேர் வரையில் ஆசி­ரியர் பயிற்சி பெறு­வ­தற்கும் 200 ஆசி­ரி­யர்கள் வரையில் நிபந்­தனை அடிப்­ப­டை­யிலும் விடு­விக்­கப்­ப­ட­வுள்­ளனர். மே மாதம் முதல் வாரத்தில் இவர்கள் விடு­விக்­கப்­ப­ட­வி­ருப்­பதால் 800 இற்குக் குறை­யாத எண்­ணிக்கை அளவில் வன்னிப் பெரு­நி­லப்­ப­ரப்புப் பாட­சா­லை­க­ளுக்குப் பதி­லீட்டு ஆசி­ரியர் இட­மாற்றம் செய்­யப்­ப­ட­வேண்டும். இல்­லா­விடில் வன்னிப் பெரு நிலப்­ப­ரப்புப் பாட­சா­லைகள் ஆசி­ரியர் ஆளணி இல்­லாத நிலையில் ஸ்தம்­பிதம் அடையும் நிலை ஏற்­படும் எனத் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

பதி­லீ­டாக யாழ்.மாவட்­டத்தில் வெளி­மா­வட்­டங்­களில் சேவை மற்றும் கஷ்டப் பிர­தேச சேவையைப் புரி­யாமல் உள்­ளூரில் கட­மையில் இருப்­ப­வர்­க­ளி­லி­ருந்தும் ஆசி­ரியர் கலா­சா­லையில் பயிற்­சியை நிறைவு செய்து கொண்டு வெளி­யே­றுவோர் மற்றும் தேசிய கல்­வி­யியல் கல்­லூ­ரி­களில் ஆசி­ரியர் தேசிய டிப்­ளோமா பயிற்­சியை முடித்துக் கொண்டு வெளி­யே­றி­யோ­ரி­லி­ருந்தும் ஆசி­ரியர் ஆளணி திரட்­டப்­ப­ட­வுள்­ளன.

இதன் முதற்­கட்­ட­மாக கோப்பாய் ஆசி­ரியர் கலா­சா­லையில் பயிற்­சியை முடித்து மே மாதம் வெளி­யே­ற­வுள்­ள­வர்­க­ளுக்கு மத்­தியில் நேர்­முகப் பரீட்சை நடை­பெற்­றது. மாகாணக் கல்வித் திணைக்­கள அதி­கா­ரி­களால் இரு தினங்கள் தொடர்ந்து நடை­பெற்ற நேர்­முகப் பரீட்சை மூலம் தகு­தி­யா­ன­வர்­களின் பட்­டியல் தயார் செய்­யப்­பட்­டுள்­ளது. கடந்த காலங்­களில் கடைப்­பி­டிக்­கப்­பட்ட நெகிழ்ச்சிப் போக்கு மற்றும் விதி­வி­லக்­குகள் பக்­கச்­சார்­புகள் இன்றி இந்த வருடம் மிகக் கண்­டிப்­பான முறையில் இட­மாற்ற வேலைத்­திட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­லா­மெனக் கூறப்­ப­டு­கின்­றது.

வன்னியில் நிலவும் ஆசி­ரி­யர்­ வெற்­றி­டங்­க­ளுக்­கு பதி­லீ­டாக யாழிலிருந்து ஆசி­ரி­யர்கள் இட­மாற்றம். Reviewed by NEWMANNAR on March 21, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.