இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் பாடசாலை திறந்து வைப்பு
இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் பாடசாலை இன்று ஹோமாகம வட்டரெக்க பகுதியில் திறந்து வைக்கப்படவுள்ளது
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரம் மற்றும் உயர்தரப்பரீட்சைகளில் தோற்றாத கைதிகளுக்கான கற்பித்தல் செயற்பாடுகள் இந்த பாடசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்திரத்ன பள்ளேகம தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட கைதிகளுக்கு முறையான கல்வியை வழங்குவதே இதன் முக்கிய நோக்கம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சிறைகைதிகளுக்கான இந்த பிரத்தியேக பாடசாலையில் 4 வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் முதலாவது சிறைச்சாலைகள் பாடசாலை திறந்து வைப்பு
Reviewed by NEWMANNAR
on
March 21, 2014
Rating:

No comments:
Post a Comment