ருஹுணுகுமாரி ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி
கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கிப் பயணித்த ருஹுணுகுமாரி ரயிலில், மாத்தறை வெலிகம பகுதியில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்றிரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன், ரயிலில் இரண்டு பேர் மோதியுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான இருவரும் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர்.
ருஹுணுகுமாரி ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி
Reviewed by NEWMANNAR
on
March 21, 2014
Rating:

No comments:
Post a Comment