அண்மைய செய்திகள்

recent
-

மன்னரில் முதல் தர உதைபந்தாட்ட லீக் அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆரம்பம்-படங்கள்

மன்னார் மாவட்டத்தில் உதைபந்தாட்ட லீக்கினால் பதிவு செய்யப்பட்ட முதல்தர அணிகளுக்கிடையிலான போட்டிகளின் முதல்நாள் ஆட்டம் நேற்று ஞாயிற்றுகிழமை  மாலை அடம்பன் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

குறித்த உதைபந்தாட்ட போட்டிகளை பிரபல சமூக ஆர்வலர் சாள்ஸ் நிமலநாதன் வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

இதன்போது மெய்வல்லுனர் சங்க செயலாளர் ஞானராஜ் மடாவட்ட உதைபந்தாட்ட தலைவர் ஜேராள்ட் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்
முதல் போட்டிகளில் அடம்பன் செந்தழிழ் விளையாட்டு கழகத்திற்கும் எமில் நகர் இருதய நகர் கழகத்திற்கும் இடையிலான போட்டி நேற்று 3.30 மணியளவில் அடம்பன் பாடசாலை விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமாகியது.

குறித்த உதைபந்தாட்ட போட்டிகள் ஒவ்வொரு சனி, ஞாயிறு தினங்களில் சுமார் 3 மாதம் வரை நடைபெறவுள்ளது.
குறித்த லீக் உதைபந்தாட்ட போட்டிகளுக்கான அனுசரனையினை பிரபல சமூக ஆர்வலர் சாள்ஸ் நிமலநாதன் வழங்கியுள்ளார்.
இன்றைய போட்டியில் இருதைய நகர் அணி 5:0 என்ற கோள் கணக்கில் வெற்றியீட்டியது.

இந்த போட்டியில் மாவட்டத்தின் 12 முதல்தர அணிகள் ஒன்றை ஒன்று எதிர்த்து விளையாடவுள்ளன. அவை லீக் முறையில் ஆடி இரண்டாம் சுற்றுக்கு தெரிவாகவுள்ளது
இதற்கான அனுசரனையினை வழங்கும் சமூக ஆர்வலர் சாள்ஸ் நிமலநாதன் மாவட்டத்தில் பல்வேறு மட்டங்களில் சேவையினை முன்நின்று செய்துவருவது குறிப்பிடத்தக்கது.


























மன்னரில் முதல் தர உதைபந்தாட்ட லீக் அணிகளுக்கிடையிலான போட்டிகள் ஆரம்பம்-படங்கள் Reviewed by Author on March 10, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.