அண்மைய செய்திகள்

  
-

மன்னார் பன்னவட்டுவான் பகுதியில் ஊஞ்சல் கயிறு இறுகி சிறுமி உயிரிழப்பு

மன்னார் மாவட்டத்தின் பன்னவட்டுவான் பகுதியைச் சேர்ந்த ரூபசிங்கம் சஜிதா (வயது 14) என்ற சிறுமி ஊஞ்சல் கயிறு இறுகி ஞாயிற்றுக்கிழமை (09) காலை உயிரிழந்ததாக மன்னார் முருங்கன் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 

 வீட்டில் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் இச்சிறுமி விளையாடிக்கொண்டிருந்தபோது, ஊஞ்சல் கயிறு தற்செயலாக இவரின் கழுத்தில் இறுகியதாகவும் இந்நிலையில், இவர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.


 இவர் மன்னார் கட்டையடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்று வருபவர் ஆவார். சடலம் பிரேத பரிசோதனைக்காக மன்னார் முருங்கன் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மன்னார் பன்னவட்டுவான் பகுதியில் ஊஞ்சல் கயிறு இறுகி சிறுமி உயிரிழப்பு Reviewed by NEWMANNAR on March 09, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.