வவுனியா – மன்னார் வீதியில் ஆணின் சடலம்
வவுனியா – மன்னார் வீதியிலும் இன்று காலை 5.45 அளவில் பொலிஸாரால் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியிலுள்ள பஸ் தரிப்பிடம் ஒன்றினுள் இருந்து சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
சடலம் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன், மரணம் தொடர்பான நீதவான் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை, புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மங்களவெளி பகுதியில் பொலிஸாரால் ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
மங்களவெளி பகுதியில் கைவிடப்பட்டுள்ள இறால் பண்ணையொன்றினுள் இருந்து நேற்றிரவு 9.30 அளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிடுகின்றது.
பொதுமக்களினால் முந்தல் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் பிரகாரம் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளதுடன், அதற்கருகில் இருந்து சில பொருட்களையும் கண்டெடுத்துள்ளனர்.
சுமார் ஒரு மாதகாலத்திற்கு முன்னர் இந்த நபர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சுமார் 45 வயதான ஒருவரே உயிரிழந்திருக்கலாம் என்றும், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சடலம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடக பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
வவுனியா – மன்னார் வீதியில் ஆணின் சடலம்
Reviewed by NEWMANNAR
on
April 05, 2014
Rating:

No comments:
Post a Comment