அரசியல் சூழ்ச்சிகளுக்கப்பால் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் அமைச்சர் பா. டெனிஸ்வரன். - படங்கள்
முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் நிர்வாகம் நீண்ட காலமாக இயங்கிவருவதனால் இந்த நிர்வாகத்தினை மாற்றியமைத்து புதிய நிர்வாகம் ஒன்றினை அமைத்து சிறப்பான சேவை ஒன்றினை வழங்க ஆவண செய்யுமாறு சங்க அங்கத்தவர்கள் கோரியதற்கமைவாக முன்னைய தலைவர் கனகரத்தினம் தலைமையில் பொதுக் கூட்டமானது முல்லைத்தீவு மத்திய மகா வித்தியாலயத்தில் 30 – 03 – 2014 இடம்பெற்றது.
இப் பொதுக் கூட்டத்தில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் கலந்து கொண்டார். அவர் அக் கூட்டத்தில் உரையாற்றுகையில் தனியார் போக்குவரத்துச் சங்கம் முல்லைத்தீவு மாவட்ட பாடசாலை மாணவர்களை இலவசமாக ஏற்றி இறக்குவதையிட்டு மகிழ்ச்சியடைவதுடன் அவர்களுக்கு தனது விசேட நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார்.
அத்துடன் போரினால் பாதிக்கப்பட்ட மிக முக்கியமான இடமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுவதனால் அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்ளும் போது இன, மத, பேதமின்றியும் அரசியல் தலையீடுகள் இன்றியும் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம், மாகாணசபை உறுப்பினர்களான அ.ரவிகரன், அன்ரனி ஜெகநாதன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் பல்வேறுபட்ட விடயங்கள் ஆராயப்பட்டதுடன், புதிய நிர்வாகத் தெரிவும் இடம்பெற்றது. இதில் தலைவர்களாக இரண்டு அங்கத்தவர்கள் தெரிவுசெய்யப்பட்டதால் பின்னர் இரகசிய வாக்கெடுப்பின் மூலம் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டார், ஏனைய நிர்வாக சபை உறுப்பினர்கள் ஏக மனதாக தெரிவுசெய்யப்பட்டனர்.
அரசியல் சூழ்ச்சிகளுக்கப்பால் மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் அமைச்சர் பா. டெனிஸ்வரன். - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
April 03, 2014
Rating:
No comments:
Post a Comment