எரிகாயங்களுடன் சிவில் பாதுகாப்பு படை வீரர் சடலமாக மீட்பு; சந்தேகநபர் கைது
அனுராதபுரம் அசிரிக்கம பகுதியில் சிவில் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் கொலை செய்யப்பட்டு சடலத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் குற்றத் தடுப்புப் பிரிவினர் முந்தல் பிரதேசத்தில் குறித்த சந்தேகநபரை நேற்று இரவு கைது செய்துள்ளனர்,
சந்தேகநபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
அனுராதபுரம் அசிரிக்கம பகுதியைச் சேர்ந்த 39 வயதான சப்ரி மொஹமட் இஷாக் என்ற சிவில் பாதுகாப்பு படை வீரரே எரிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்
எரிகாயங்களுடன் சிவில் பாதுகாப்பு படை வீரர் சடலமாக மீட்பு; சந்தேகநபர் கைது
Reviewed by NEWMANNAR
on
July 21, 2014
Rating:

No comments:
Post a Comment