எல் நீனோ காற்றினால் இலங்கை பாதிக்கப்படும் -வளிமண்டலவியல் திணைக்களம்
இலங்கை எதிர்வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் எல் நீனோ எனும் கடுமையான காற்றினால் பாதிக்கப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இலங்கையில் வடக்கு தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களுக்கும் காற்று வீசக்கூடும் என்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என அத்திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் எதிர்வரும் நாட்களில் மத்திய மாகாணத்தில் மணித்தியாலத்திற்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் காற்றுவீசும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமேல், சப்ரகமுவ, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் எதிர்வு கூறியுள்ளது.
எல் நீனோ காற்றினால் இலங்கை பாதிக்கப்படும் -வளிமண்டலவியல் திணைக்களம்
Reviewed by NEWMANNAR
on
July 21, 2014
Rating:

No comments:
Post a Comment