தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 1 ஆம் திகதி வரை(01-08-2014) விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று புதன் கிழமை உத்தரவிட்டார்.
இலங்கை கடற்பரப்பினுள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 20 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து நேற்று செவ்வாய்க்கிழமை(22) அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
4 படகுகளில் மீன் பிடியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போதே குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பின் குறித்த மீனவர்களை கடற்படையினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரனைகளின் பின் குறித்த மீனவர்களை இன்று புதன் கிழமை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.இதன் போது விசாரனைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் குறித்த மீனவர்களை எதிர் வரும் 1 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட 20 இந்திய மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:

No comments:
Post a Comment