27,000 கிலோகிராம் மஞ்சள் மீட்பு
இந்தியாவிலிருந்து மோசடியான முறையில் 02 கொள்கலன்களில் இறக்குமதி செய்யப்பட்ட 27,000 கிலோகிராம் மஞ்சளை சுங்க வருவாய் செயலணிக் குழுவினர் மீட்டுள்ளதாக சுங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் லெஸ்லி காமினி தெரிவித்துள்ளார்.
இது அரிசியென வெளிப்படுத்தப்பட்டு வரியில் 5.6 மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.
27,000 கிலோகிராம் மஞ்சளின் பெறுமதி சுமார் 9.5 மில்லியன் ரூபாய் ஆகும். பொருட்களின் மொத்தப் பெறுமதி 10.5 மில்லியன் ரூபாய் ஆகும். வரி மோசடித் தொகை 5.5 மில்லியன் ரூபாய் எனவும் அவர் கூறினார்.
ஒறுகொடவத்தை களஞ்சியசாலையில், கடந்த 14ஆம் திகதி தூத்துக்குடியிலிருந்து வந்த 20 அடி கொள்கலன்கள் இரண்டை சுங்க வருவாய் செயலணிக்குழுவினர் இன்று புதன்கிழமை காலை சோதனையிட்டனர்.
இந்த நிலையில், இறக்குமதி செய்யப்பட்ட பொருள் 37,500 கிலோகிராம் அரிசியென வெளிப்படுத்திய இறக்குமதியாளர், 187,500 ரூபாவை மாத்திரம் வரியாக செலுத்தியுள்ளார்.
இந்தச் சோதனையின்போது அவற்றில் 10,000 கிலோ அரிசியும் 27,000 கிலோ மஞ்சளும் இருந்தமை தெரியவந்துள்ளது.
27,000 கிலோகிராம் மஞ்சள் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
July 23, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment