மரக்கிளையை வெட்டுவதற்காக இளைஞரை மரத்தில் ஏற்றிய மின்சார சபை ஊழியர்கள் கைது
மட்டக்களப்பு மாவடிச்சேனையில் இளைஞன் ஒருவரை மின்கம்பிகளுக்கு தடை ஏற்படுத்தும் மரக்கிளைகளை வெட்டுவதற்காக மரத்தில் ஏற்றியமைக்காக இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளைகளை வெட்டிய இளைஞன் மரத்தில் இருந்து கீழே விழுந்து பலத்த காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக கண்டி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
கண்டி பொது வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் இளைஞனுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவிக்கின்றது.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல் இடம்பெற்றதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள இலங்கை மின்சார சபை ஊழியர்கள் மூவரையும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மரக்கிளையை வெட்டுவதற்காக இளைஞரை மரத்தில் ஏற்றிய மின்சார சபை ஊழியர்கள் கைது
Reviewed by NEWMANNAR
on
August 28, 2014
Rating:

No comments:
Post a Comment