சும்மாடு என்றால் என்ன?
தலையில் பாரம் சுமக்கும் போது தலையில் கனம் அழுந்தாமல் இருக்க, துணியை உருட்டி தலையில் வைத்து அதன் மேல் சுமையை வைப்பார்கள்.
இவ்வாறு உருட்டி வைக்கப்படும் துணியே சும்மாடு ஆகும்.
பெரும்பாலும் பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பையும் ஆண்கள் தங்கள் துண்டையும் சும்மாடாகப் பயன்படுத்துவார்கள்.
சங்க இலக்கியங்களான கலித்தொகையிலும் பெரும்பாணாற்றுப் படையிலும் இது சுமடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சோழியன் குடுமி சும்மாடு ஆகாது எனும் பழமொழியே இன்று திரிந்து "சோழியன் குடுமி சும்மா ஆடாது" என்று மாறி விட்டது.
சும்மாடு என்றால் என்ன?
Reviewed by NEWMANNAR
on
August 04, 2014
Rating:

No comments:
Post a Comment