அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் 'டைனமெற்' வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட 06 மீனவர்கள் பிணையில் செல்ல அனுமதி.

மன்னார் சௌத்பார் கடற்பரப்பில் வைத்து 'டைனமெட்' வெடி பொருட்களுடன் நேற்று(6) சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்ட 06 மீனவர்களும் நேற்று சனிக்கிழமை மதியம் சரீரப்பிணையில் செல்ல மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பெல்டானோ உத்தரவிட்டார். 

 மன்னார் பனங்கட்டுக்கோட்டைச் சேர்ந்த 06 மீனவர்களை 'டைனமெட்' வெட்டி பொருட்களுடன் நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் கடற்படையினர் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 2700 கிராம் 'டைனமெற்' வெடி மருந்து மற்றும் 10 டிக்னேற்றர் குச்சிகள் ஆகியவை கைப்பற்றப்பட்டது. 

 இந்த நிலையில் குறித்த 06 மீனவர்களையும் கடற்படையினர் நேற்று(6) சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் மன்னார் கடற்தொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதாக மாவட்ட கடற்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் வி.எஸ்.மெராண்டா தெரிவித்தார். 

 குறித்த மீனவர்களிடம் முழுமையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின் அன்றைய தினம் மதியம் மன்னார் பதில் நீதவான் இ.கயஸ் பல்டானோ முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது குறித்த 06 மீனவர்களையும் தலா 50 ஆயிரம் ரூபாய் சரீரப்பிணையில் செல்ல நீதவான் அனுமதித்தார். மீண்டும் குறித்த விசாரணை  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 03 ஆம் திகதி விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் 'டைனமெற்' வெடிபொருட்களுடன் கைது செய்யப்பட்ட 06 மீனவர்கள் பிணையில் செல்ல அனுமதி. Reviewed by NEWMANNAR on September 07, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.