வட மாகாண சபையின் அதிகாரங்கள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளன – எஸ்.சிவமோகன்
வட மாகாண சபையின் அதிகாரங்கள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர் டொக்டர் எஸ்.சிவமோகன் தெரிவிக்கின்றார்.
முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாம் நாமாக வளர்வதுதான அபிவிருத்தி. இன்னொருத்தனின் கையை நம்புவது அபிவிருத்தி இல்லை. எம்மிடம் எந்த அதிகாரமும் இல்லை. தட்டிப்பறிக்கப்பட்டுள்ளது. எமக்கு உள்ள அரசில் நாம் வெளிநாட்டு நிதியை கொண்டுவந்து பாவிக்க முடியவில்லை. முதலமைச்சர் நிதியத்திற்கும் அனுமதி இல்லை. இப்படியான நிலையில்தான் நாம் வட மாகாண சபையில் இயங்குகிறோம்.
வட மாகாண சபையின் அதிகாரங்கள் தட்டிப் பறிக்கப்பட்டுள்ளன – எஸ்.சிவமோகன்
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:


No comments:
Post a Comment