புல்மோட்டையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில்
திருகோணமலை புல்மோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஊறாவெவ பகுதியில் பாடசாலை மாணவியை தூஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
13 வயதான குறித்த மாணவி பாடசாலையில் இருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது 70 வயதான சந்தேகபரினால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று திருகோணமலை பதில் நீதவான் திருச் செந்தில்நாதன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
புல்மோட்டையில் சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியவர் விளக்கமறியலில்
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:


No comments:
Post a Comment