மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினத்திற்கான வழக்குகள் அனைத்தும் ஒத்திவைப்பு
மன்னார் நீதவான் நீதிமன்றத்தின் இன்றைய தினத்திற்கான அனைத்து வழக்கு விசாரணைகளும் பிற்போடப்பட்டுள்ளன.
அதற்கமைய, பிற்போடப்பட்டுள்ள அனைத்து வழக்குகளும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபப்படும் என மன்னார் நீதவான் அறிவித்துள்ளார்.
இன்று பொது விடுமுறை என்ற காரணத்தால் வழக்குகள் பிற்போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்த விளக்கமறியல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த மூன்றாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினத்திற்கான வழக்குகள் அனைத்தும் ஒத்திவைப்பு
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
October 06, 2014
Rating:


No comments:
Post a Comment