பேஸ்புக் கிண்டல் விபரீதம்! மாணவன் தலைமறைவு
பேஸ்புக் மூலம் பெண்களைக் கிண்டல் செய்து கொண்டிருப்பது குறித்து எச்சரிக்கப்பட்ட மாணவன் ஒருவன் அச்சம் காரணமாக தலைமறைவாகியுள்ளான்.
காலி பகுதியில் பிரபலமான பாடசாலையொன்றின் உயர்தர வகுப்பு மாணவன் ஒருவனே இவ்வாறு தலைமறைவாகியுள்ளதாக தினமிண பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
குறித்த மாணவன் கணிதத்துக்கான ஒலிம்பியாட் போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற்ற திறமையான மாணவன் என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் பேஸ் புக் மூலமாக குறித்த மாணவன் பெண்களைக் கிண்டல் செய்வது, தரங்கெட்ட வார்த்தைப் பிரயோகம், ஆபாச படங்களை அனுப்புதல் என்றவாறாக தொல்லை கொடுத்து வந்துள்ளான்.
இதன் காரணமாக பாதிக்கப்பட்ட ஒரு யுவதி நைசாக உரையாடி மாணவன் குறித்த தகவல்களைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பின்னர் குறித்த மாணவன் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப் போவதாக அச்சுறுத்திய நிலையில் அச்சம் காரணமாக மாணவன் வீட்டை விட்டு தலைமறைவாகியுள்ளான்.
சம்பவம் தொடர்பில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாகவும் தினமிண செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பேஸ்புக் கிண்டல் விபரீதம்! மாணவன் தலைமறைவு
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
November 17, 2014
Rating:


No comments:
Post a Comment