மலையக பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞான பிரிவை ஆரம்பிக்க ஏற்பாடு
மலையகத்திலுள்ள பிரதான பாடசாலைகளில் க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பாடப்பிரிவை அரசின் 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென ராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் வீரகேசரிக்குத் தெரிவித்தார்.
மலையகத்திலுள்ள ஒரு சில பாடசாலைகளில் மாத்திரமே க.பொ.த. உயர்தரத்தில் விஞ்ஞான பிரிவு இருக்கின்றது. எனவே மலையகப் பாடசாலைகளின் விஞ்ஞானப்பிரிவை உடனடியாக ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படவுள்ளதாகவும் ராஜாங்க ககல்வி அமைச்சர் தெரிவித்தார். ராஜாங்க கல்வி அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் நாளை திங்கட்கிழமை காலை தமது பொறுப்புக்களை ஏற்கின்றார்.
மலையக பாடசாலைகளில் உயர்தர விஞ்ஞான பிரிவை ஆரம்பிக்க ஏற்பாடு
Reviewed by NEWMANNAR
on
January 18, 2015
Rating:

No comments:
Post a Comment