அண்மைய செய்திகள்

recent
-

தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்பு மீறலல்ல


தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடு­வதை தமிழ் இன­வா­த­மா­கவோ அல்­லது சிங்­கள இன­வா­த­மா­கவோ அர்த்­தப்­ப­டுத்த முயற்­சிக்க வேண்டாம் என நேற்று சபையில் வலி­யு­றுத்­திய முன்னாள் அமைச்சர் வாசு தேவ நாண­யக்­கார, தேசிய கீதத்தை தaமிழ் மொழியில் பாடு­வ­தற்கு அர­சி­ய­ல­மைப்பு மீறல் அல்ல என்றும் சுட்டிக்காட்டினார்.



பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்ற சபை ஒத்­தி­வைப்பு பிரே­ரணை விவா­தத்தில் உரை­யாற்றும் போதே வாசு­தேவ நாண­யக்­கார எம்.பி. இவ்­வாறு தெரி­வித்தார். சபையில் அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இலங்­கையில் அர­சி­ய­ல­மைப்பின் தமிழ் மொழி­யாக்­கத்தில் 205 ஆம் பக்­கத்தில் தேசிய கீதம் தமிழ் மொழியில் எழு­தப்­பட்­டுள்­ளது. இந்த தமிழ் மொழி பெயர்ப்பை 1940 களில் நல்­ல­தம்பி பண்­டிதர் செய்தார்.

அவ­ரது மொழி­பெ­யர்ப்பில் சிங்­க­ளத்தில் இயற்­றப்­பட்ட தேசிய கீதத்தின் அர்த்தம் எது­வி­த­மான மாற்­றமும் இல்­லாமல் அனைத்து சொற்­ப­தங்­களும் தமிழில் அமைந்­துள்­ளது. சிங்­க­ளத்தில் ஸ்ரீலங்கா நமோ மாதா என்றும் அதே­போன்று தமிழில் நமோ நமோ தாயே என்றும் ஒரு பொருளில் அர்த்­தத்தில் மொழி­பெ­யர்க்­கப்­பட்­டுள்­ளது.

அது மட்­டு­மல்­லாது சிங்­கள இசை மெட்­டுக்கு ஏற்ற வகை­யி­லேயே தமி­ழிலும் உள்­ளது. எந்­த­வி­த­மான மாற்­றமும் கிடை­யாது. அது மட்­டு­மல்­லாது அர­சி­ய­ல­மைப்­பிலும் தமிழில் உள்­ளது. தமிழில் பாடு­வது அர­சியல் அமைப்பு மீறல் அல்ல. அது அர­சி­ய­ல­மைப்­புக்கு உட்­பட்­ட­தே­யாகும்.

தமிழ் மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பகு­தி­களில் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடலாம்.அதே­போன்று சிங்­கள மக்கள் பெரும்­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களில் சிங்­க­ளத்­திலும் தேசிய கீதத்தை பாடலாம்.

பெரும்­பாலும் தேசிய நிகழ்ச்­சி­களில் சிங்­கள மொழி­யி­லேயே தேசிய கீதம் பாடப்­ப­டு­கின்­றது. நான் சமூக ஒரு­மைப்­பாடு அமைச்­ச­ராக அந்த ஆட்­சியில் இருந்த போது ஒரு யோச­னையை முன்­வைத்தேன். தென்­னா­பி­ரிக்­காவைப் போல் இலங்­கை­யிலும் தேசிய கீதத்தை சிங்­கள தமிழ் சொற்­ப­தங்­களைக் கொண்டு சேர்த்து பாட வேண்டும் என. அப்­போது தேசிய கீதத்தில் இரண்டு மொழி­களும் கலந்து விடும்.

ஆனால் அது நிறை­வே­ற­வில்லை. ஜனா­தி­பதி சிங்­க­ளத்தில் உரை­யாற்றும் போது அந்த உரையை தமிழில் மொழி பெயர்க்கின்றோம். எனவே தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாடுவதை தமிழ் இனவாதமாகவோ அல்லது சிங்கள இனவாதமாகவோ அர்த்தப்படுத்தல் கூடாது என்றும் வாசுதேவ நாணயக்கார எம்.பி. தெரிவித்தார்.
தமிழ் மொழியில் பாடுவது அரசியலமைப்பு மீறலல்ல Reviewed by NEWMANNAR on March 21, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.