கணிதப் பாடத்தில் சித்தியடைய தவறிய மாணவி தற்கொலை
புஸல்லாவ பிரதேசத்தில் பாடசாலை மாணவியொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் கணிதப் பாடத்தில் சித்தியடையாத காரணத்தினாலேயே மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடிதம் ஒன்றில் தமது தீர்மானத்திற்கான காரணத்தை எழுதி வைத்து விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர கூறினார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கணிதப் பாடத்தில் சித்தியடைய தவறிய மாணவி தற்கொலை
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
March 31, 2015
Rating:


No comments:
Post a Comment