மந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கூராய் கிராமத்தில் சட்ட விரோத மணல் அகழ்வு-பொலிஸார் ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் குற்றச்சாட்டு.-Photos
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட மீள் குடியேற்றம் செய்யப்பட்ட கூராய் கிராமத்தில் சட்டவிரோதமான முறையில் தொடர்ச்சியாக மணல் மண் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும், தென்பகுதியை சேர்ந்த தனி நபர் ஒருவர் பொலிஸாரின் செல்வாக்குடன் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக அக்கிராம மக்கள் மன்னார் பிரஜைகள் குழுவிடம் முறையிட்டுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பிரஜைகள் குழுவின் உப தலைவரும்,மன்னார் பிரதேச சபையின் உப தலைவருமான அந்தோனி சகாயம் நேற்று சனிக்கிழமை(21) கூராய் கிராமத்திற்கு சென்று மணல் மண் அகழ்வு செய்யப்படும் இடத்தை பார்வையிட்டார்.
தென்பகுதியைச் சேர்ந்த சிங்களவர் ஒருவர் இவ்வாறு சட்டவிரோதமான முறையில் மணல் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதாகவும் இவருக்கு இலுப்பக்கடவை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸார் ஆதரவு வழங்கி வருவதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
-குறித்த தென்பகுதியைச் சேர்ந்த நபர் இலுப்பக்கடவை பொலிஸாரை பயண்படுத்தில் கூராய் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலரையும் அச்சுரூத்துவதாகவும் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக கூராய் கிராமத்தில் உள்ள மக்களும் உரிய ஆவணங்களுடன் ஒதுக்கப்பட்ட இடங்களில் மணல் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் தென்பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் தற்போது கூராய் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டு வருவதாக கூராய் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் எஸ்.சந்திரமோகன் தெரிவித்தார்.
குறித்த மணல் அகழ்வினை கிராம மக்களின் உதவியுடன் நிறுத்திய போது இனி இவ்விடத்தில் மணல் அகழ்வில் ஈடுபட மாட்டேன் என தெரிவித்த குறித்த தென்பகுதியைச் சேர்ந்த நபர் பாதையை வேறு இடத்தால் வைத்து மீண்டும் அவ்விடத்தில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
ஏற்கனவே இப்பகுதியில் மணல் மண் சட்டவிரோதமான முறையில் அகழ்வு இடம் பெற்று வருகின்றமை தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனை இடம் பெற்று வருகின்றது.
இதன் போது குறித்த பகுதியில் மணல் மண் அகழ்வு செய்ய நீதிமன்றம் தடை விதித்திருந்தது.எனினும் குறித்த நபர் சட்ட விரோதமான முறையில் அவ்விடத்திலேயே மீண்டும் மணல் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
-கூராய் சித்துவினாயகர் குளம் பரங்கியாற்றுப் பகுதியில் மணல் மண் அகழ்வதற்காக வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரத்தை வைத்துக்கொண்டு கூராய் கிராம அபிவிருத்திச்சங்கத்திற்கு சொந்தமான பகுதியில் மணல் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.தற்போது கூராய் கிராமத்தினூடாக அதிகலவான டிப்பர் வாகனங்கள் செல்வதினால் பாதைகளும் பாதீக்கப்பட்டுள்ளது.
தற்போது அளவுக்கு அதிகமாக மணல் மண் அகழ்வு செய்யப்பட்டுள்ளமையினால் கடல் நீர் கூராய் கிராமத்திற்குள் செல்லும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி ஆற்று நீர் உப்பு நீராக மாறும் நிலை ஏற்படுவதினால் விவசாயம் மற்றும் தோட்டம் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இன்னும் இரு மாதங்களில் இப்பகுதி முழுவதும் உவர் நீராக மாறிவிடும்.எனவே இக்கிராம மக்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு கூராய் கிராம அபிவிருத்திச்சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
-மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் இவ்விடையத்தில் தொடர்ந்தும் அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருவதாக அக்கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
கூராய் கிராமத்தில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்கள் பல்வேறு நடைமுறை சிக்கல்களுக்கும் முகம்கொடுத்து வருகின்றனர். 2010ம் ஆண்டுக்கு பின்னரான காலப்பகுதியில் 30 குடும்பங்களை கொண்ட 115 நபர்கள் மீள்குடியேற்றப்பட்டனர்.
இது வரையில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கோ அல்லது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் அக்கிராம மக்கள் தெரிவித்தனர்.
இக்கிரமத்திற்கு மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி, பாதைகள், போக்குவரத்து, சுகாதாரம், வீட்டுத்திட்டங்கள் போன்ற பல தேவைகள் காணப்படுகின்றன.
எனவே கூராய் கிராம மக்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு மன்னார் பிரஜைகள் குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கூராய் கிராமத்தில் சட்ட விரோத மணல் அகழ்வு-பொலிஸார் ஆதரவு வழங்குவதாகவும் மக்கள் குற்றச்சாட்டு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 22, 2015
Rating:
No comments:
Post a Comment