அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் ஆயர் விரைவில் நலம்பெற வேண்டி விசேட பிரார்த்தனை


சுக­வீ­ன­முற்று கொழும்பு தேசிய வைத்­தி­ய­சாலையின் அவ­ச­ரப்­பி­ரிவில் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மன்னார் மறை­மா­வட்ட ஆயர் வண.இரா­யப்பு ஜோசப் ஆண்­டகைக்கு சுகம் கிடைக்க வேண்டுமென பிரார்த்தித்து நேற்றைய ஞாயிறு திருப்­பலியில் விசேட மக்கள் பிரார்த்தனையில் இடம்பெற்றது.

மன்னார் மறை­மா­வட்ட ஆயர் இரா­யப்பு ஜோசப் ஆண்­டகை கம்பன் கழக விருது பெறு­வ­தற்­காக கொழும்பு வந்திருந்­த­போது திடீர் சுக­வீ­ன­முற்று கொழும்பு தேசிய வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்நிலையில் இந்த செய்தி கேள்வியுற்றதும் மன்னார் மறை­மா­வட்­டத்­தி­லுள்ள இறை­மக்கள் ஆய­ருக்கு நல்ல சுகம் கிடைக்க வேண்டும் எனவும் அவர் தனது வாஸ்­த­தலம் திரும்பி தொடர்ந்து தனது பணியை முன்­னெ­டுத்துச் செல்­ல வேண்டுமெனவும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

சிறைப்­பட்டோர் விடு­தலைப் பெறவும் அடக்­கப்­பட்டோர் ஒடுக்­கப்­பட்­டோ­ருக்­காக ஆண்டகையின் குரல் ஒலிக்க வேண்டும் எனவும் இறைவன் அவ­ருக்கு நல்ல சுகம் கொடுக்க வேண்டும் என விசேட­மாக ஞாயிறு திருப்­பலி வேளையில் இறை­மக்கள் வேண்டிக் கொண்­டனர்.

இதேவேளை மன்னார் ஆயர் இராயப்ப ஜோசப் ஆண்டகை பக்­க­வா­தத்தால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக மருத்­து­வர்­களை மேற்­கோள்­காட்டி தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரிவித்துள்ளார்.

இலங்கை வந்­துள்ள அமெ­ரிக்க வெளி­யு­றவுச் செயலர் ஜான் கெர்­ரியை சந்­திக்கச் சென்­று­கொண்­டி­ருந்த போதே அவ­ருக்கு திடீர் உடல்­ந­லக்­கு­றைவு ஏற்­பட்­ட­தா­கவும், உட­ன­டி­யாக அவர் கொழும்­பி­லுள்ள தேசிய மருத்­து­வ­ம­னையில் அனு­ம­திக்­கப்­பட்­ட­தா­கவும் அடைக்­க­ல­நாதன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஆண்டகைக்கு வேண்­டிய மருத்­துவ சிகிக்­சை­களை வழங்க உரிய நட­வ­டிக்­கை­களை எடுக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க உத்­த­ர­விட்­டுள்ளார்.
மன்னார் ஆயர் விரைவில் நலம்பெற வேண்டி விசேட பிரார்த்தனை Reviewed by NEWMANNAR on May 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.