அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள 3 உணவகங்களை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு-மன்னார் 'சதோச' விற்பனை நிலையத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை..

மன்னார் பஸார் பகுதியில் உள்ள பிரபலமான மூன்று உணவகங்களை மூடுமாறு இன்று வியாழக்கிழமை (18) மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மன்னார் பஸார் பகுதியில் உள்ள நான்கு (4) வர்த்தக நிலைங்களில் சுகாதார சீர்கேடுகளுடன் உணவு விற்பனை செய்யப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் ஏற்கனவே குறித்த உணவகங்களுக்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் குறித்த வர்த்தக நிலையங்களில் காணப்படுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய மன்னார் நீதிமன்றம் ஏற்கனவே குறித்த நான்கு (4) வர்த்தக நிலைங்களுக்கும் கால அவகாசம் வழங்கி இருந்தது.

இந்த நிலையில் குறித்த 4 வர்த்தக நிலையங்களும் இன்று வியாழக்கிழமை (18) மன்னார் மாவட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் தலைமையில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு குறித்த 4 உணவங்களுக்கும் எதிராக மன்னார் நீதிமன்றத்தில் வழக்கு விசாரனைகளும் இன்று(18) இடம் பெற்றது.

இதன்போது குறித்த 4 உணவகங்களில் ஒரு உணவகம் மன்னார் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக தனது உணவகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ததோடு குறித்த உணவகத்தின் உரிமையாளர் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தார்.

அதே வேளை ஏனைய 3 உணவக உரிமையாளர்களில் இருவர் தமது உணவகத்தின் குறையாடுகள் நிவர்த்தி செய்யப்படாத நிலையிலும் நீதிமன்றத்தின் உத்தரவிற்கமைவாக மன்றில் இன்று(18) ஆஐராகியிருந்தார்.

மற்றைய ஒரு உணவகத்தின் உரிமையாளர் தனது உணவகத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத நிலையில் தனது உணவகத்தில் கடமையாற்றுகின்ற பனியாளரை மன்னார் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்திருந்தனர்.

-இதன் போது விசாரனைகளை மேற்கொள்ட மன்னார் நீதவான் தமது வர்த்தக நிலையங்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்யாத குறித்த 3 வர்த்தக நிலையங்களையும் மூடுமாறு உத்தரவிட்டார்;.

இதற்கமைவாக குறித்த வர்த்தக நிலையங்கள் ஒவ்வொன்றையும் தனித்தனியாக மூட நீதவான் உத்தரவிட்டார்.

குறித்த 3 வர்த்தக நிலையங்களில் ஒன்றை எதிர்வரும் 21 ஆம் திகதி 7 ஆம் மாதம் இரண்டாவது வர்த்தக நிலையத்தை 08 ஆம் திகதி 09 ஆம் மாதம் வரையும் 3 ஆவது வர்த்தக நிலையத்தை 30 ஆம் திகதி 7 ஆம் மாதம் வரையும் மூடுமாறும், நீதிமன்றத்தில் ஆஜரான 2 உணவக நிலையங்களின் உரிiமாயளர்களையும் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரித பினையில் செல்ல நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் குறித்த ஒரு உணவகத்தின் உரிமையாளர் நீதிமன்றத்திற்கு இன்று வியாழக்கிழமை(18) சமூகமளிக்காததன் காரணத்தினால் குறித்த உணவக உரிமையாளரை கைது செய்து மன்றில் ஆஜர்படுத்த நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

இதே வேளை மன்னார் பஸார் பகுதியில் உள்ள 'சதோசா' விற்பனை நிலையத்தில் பொருட்கள் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்படுவதாக மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு மக்கள் முறைப்பாடு செய்த நிலையில் இன்று வியாழக்கிழமை (18) மதியம் மன்னார் சதோசா விற்பனை நிலையத்திற்குச் சென்ற மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் சோதனைகளை மேற்கொண்ட போது ஒரு தொகுதி மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை மீட்டதோடு எலி நடமாட்டத்தினால் குறித்த விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர் கேடுகளை அறிந்து கொண்டனர்.

அத்துடன் குறித்த சதோசா விற்பனை நிலையத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய குறித்த நிர்வாகத்திற்கு மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவினர் உத்தரவிட்டுள்ளதோடு மீட்கப்பட்டுள்ள மனித பாவனைக்கு உதவாத உணவு பொருட்களை மன்னார் நீதிமன்றத்தில் பாரப்படுத்தி வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைகளை மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் பஸார் பகுதியில் அமைந்துள்ள 3 உணவகங்களை மூட மன்னார் நீதிமன்றம் உத்தரவு-மன்னார் 'சதோச' விற்பனை நிலையத்திற்கு எதிராகவும் வழக்கு தாக்கல் செய்யவும் நடவடிக்கை.. Reviewed by NEWMANNAR on June 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.