அண்மைய செய்திகள்

recent
-

யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் ரோந்து நடவடிக்கை


யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் குற்றச்செயல்களைக் கட்டுப்படுத்த  பொலிஸாரை சைக்கிளில் நாளாந்தம் ரோந்தில் ஈடுபடுத்துவதற்கு யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி விசேட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ் நகர பாடசாலைகளுக்கு அருகாமையில் இடம்பெறும் போதைப்பொருள் வியாபாரம், குற்றச்செயல்கள்  மற்றும் பாடசாலை மாணவிகளுடன் சேஷ்டை யில் ஈடுபடுதல் போன்ற நடவடிக்கைகளை  கட்டுப்படுத்தவே குறித்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த செயல்களை கண்காணிக்கவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி முன்றலில்  இருந்து இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

சைக்கிளில் நாளாந்தம் ரோந்தில் ஈடுபடும் பொலிசார் காலை மற்றும் பாடசாலை நிறைவடையும் வேளைகளில் பாடசாலை பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் சந்தேகத்திற்கிடமான முறையில்  நடமாடுபவர்கள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
யாழில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த பொலிஸார் ரோந்து நடவடிக்கை Reviewed by Author on June 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.