அண்மைய செய்திகள்

recent
-

மன்னார் -'பட்ட காலில் படும் சுட்ட புண்ணில் சுடும்..." பரிதாபமான விபத்து சம்பவம்


விபத்தொன்றில் சிக்கி படுகாயமடைந்து மன்னார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற ஒருவர் குணமடைந்து வீடு திரும்பிக்கொண்டிருக்கையில் மீண்டும் விபத்துக்குள்ளாகி குறித்த வைத்தியசாலையில் திரும்பவும் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை புதுக்குடியிருப்பு கிராமத்துக்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.

இது பற்றி தெரிய வருவதாவது, பேசாலையை சேர்ந்த ஏ. சுரேன்லோகு (வயது 24) என்பவர் கடந்த   திங்கட்கிழமை மோட்டார் சைக்கிளில் விபத்துக்குள்ளாகி மன்னார் வைத்தியசாலையில் தங்கியி ருந்து சிகிச்சை பெற்று விட்டு  இன்று   தனது சகோதரனுடனும் நண்பர்களுடனும் முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிய போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. 

கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கரவண்டி  வீதியை விட்டு விலகி குடைசாய்ந்துள்ளது. அதேபோல் அவ்வண்டியில்  பயணித்த நான்கு பேரும் காயங்களுக்குள்ளாகி மன்னார் பொது வைத்திசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

பேசாலையை சேர்ந்த ஏ. தர்சன் லோகு (வயது 18) ஏ. சுரேன் லோகு (வயது 24) பி. நிரோன் (வயது 20) ஏ. நியூமன் (வயது 18) ஆகியோரே மேற்படி சம்பவத்தில் படுகாயமடைந்தவர்களாவர்.
மன்னார் -'பட்ட காலில் படும் சுட்ட புண்ணில் சுடும்..." பரிதாபமான விபத்து சம்பவம் Reviewed by Author on June 18, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.