மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் உடைக்கப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடம் வீழ்ந்ததில் ஒருவர் காயம்.-Photos
மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தின் பின் பகுதியில் அமைந்திருந்த பழைமை வாய்ந்த கட்;டிடம் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது கட்டிட இடிபாடுட்டில் சிக்கி வேளை செய்த தொழிலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை(4) மாலை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் பின் பகுதிக்கு முழுமையாக சுற்று மதில் அமைக்கப்பட்ட நிலையில் மாவட்டச் செயலகத்தின் பின் பகுதியில் கடந்த காலங்களில் வியாபார நிலையமாக காணப்பட்ட குறித்த கட்டிடம் கடந்த சில தினங்களாக உடைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று (4) வியாழக்கிழமை காலை முதல் இரண்டு தொழிலாளர்கள்; குறித்த கட்டிடத்தின் எஞ்சிய பகுதிகளை உடைத்துக்கொண்டிருந்த போது கட்டிடத்தின் கீலே நின்று வேளை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது கட்டிடம் உடைந்து வீழ்ந்துள்ளது.
எனினும் குறித்த தொழிலாளியின் கால் கட்டிட உடைவுகளில் மாட்டிக்கொண்ட நிலையில் நீண்ட நேரத்தின் பின் வீதியால் சென்றவர்களின் உதவியும் குறித்த தொழிலாளி காப்பாற்றப்பட்டு உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
55 வயதுடைய குறித்த நபரின் தலையில் காயம் ஏற்பட்டுள்ளதோடு கால் பகுதியில் முறிவு மற்றும் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தில் உடைக்கப்பட்டுக்கொண்டிருந்த கட்டிடம் வீழ்ந்ததில் ஒருவர் காயம்.-Photos
Reviewed by NEWMANNAR
on
June 04, 2015
Rating:
No comments:
Post a Comment