அண்மைய செய்திகள்

recent
-

முதலமைச்சர் பதவிப்பிரமாணம்! ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கின்றோம்! இரா.சம்பந்தன்

யாழ்ப்பாணத்தில் வைத்து, வடக்கு மாகாணசபை முதலமைச்சர் மற்றும் சபை உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கொழும்பு ஆங்கில வார இதழ் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில் அமெரிக்காவில் இருந்து திரும்பும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்காக காத்திருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண முதலமைச்சருக்கு யாழ்ப்பாணத்தில் வைத்தே ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். 

 மாகாணசபைக்கள் சட்டத்தின்படி, மாகாண முதலமைச்சர், ஜனாதிபதி முன்னிலையிலோ ஆளுநர் முன்னிலையிலோ பதவியேற்க முடியும். ஆனால் மாகாண அமைச்சர்கள், முதலமைச்சரின் முன்பாக பதவியேற்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, வெளிநாட்டுப் பயணத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாடு திரும்பியவுடன், பதவிப்பிரமாணம் தொடர்பில் ஜனாதிபதிக்கு ஆளுநர் தெரியப்படுத்துவார்.

 ஜனாதிபதி நேற்று கொழும்பு திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து, பதவிப் பிரமாணம் செய்வதற்கான அழைப்பு விக்னேஸ்வரனுக்கு அனுப்பப்படும். இதேவேளையில், பதவிப் பிரமாண ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண ஆளுநர், முதலமைச்சராகத் தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேசுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இந்தச் சந்திப்பு இடம்பெறலாம் என அரச தரப்பு தெரிவிக்கின்றது.
முதலமைச்சர் பதவிப்பிரமாணம்! ஜனாதிபதியின் வருகைக்காக காத்திருக்கின்றோம்! இரா.சம்பந்தன் Reviewed by Admin on September 29, 2013 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.